ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஏமாற்றம் அளித்த படம் 'குமாரி'. இந்த படத்தை அவர் பெரிதும் நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கை வீண் போனது. நீண்டு கொண்டே செல்லும் கதை, சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால் படம் தோல்வி அடைந்தது.
இந்த படத்தில் எம்ஜிஆருடன், மாதுரி தேவி, ஸ்ரீரஞ்சனி, சேருகளத்தூர் சாமா, டி.எஸ். துரைராஜ், கே.எஸ். அங்கமுத்து, சி.டி. ராஜகாந்தம் மற்றும் புலிமூட்டை' ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். ஆர். பத்மநாபன் இயக்கினார். காட்டுக்குள் தன்னால் காப்பாற்றப்பட்ட ஒரு இளவரசியை மணப்பதற்காக அவளின் அரண்மனைக்கே சென்று அதை சாதிக்கும் ஒரு இளைஞனின் கதை. கே.வி.மகாதேவன் இசையமைத்தார், டி. மார்கோனி ஒளிப்பதிவு செய்தார்.




