Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: அன்னையின் வசனம் பேசி, அமரர் எம் ஜி ஆரின் மனதில் இடம் பிடித்த ஆரூர்தாஸ்

08 பிப், 2026 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Flashback-Aroordas,-who-spoke-the-lines-of-his-mother-and-won-a-place-in-the-heart-of-the-late-MGR
Advertisement


தமிழ் திரையுலகில் மற்ற நடிகர்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு எம் ஜி ஆருக்கு எப்போதும் இருப்பதுண்டு. அவரது திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் வடிவமைப்பிற்கும், பாடல்களுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம் எவ்வளவு முதன்மையானதோ, அதைவிட ஒரு பங்கு அதிகமாக படத்தில் இடம் பெறும் வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற திடமான எண்ணம் உடையவர்தான் எம் ஜி ஆர்.

தான் பேசும் வசனம் ஒவ்வொன்றும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களை நல்வழிப்படுத்தி, பண்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டக் கூடியவராக இறுதிவரை கடைபிடித்து, தனது கலையுலகப் பயணத்தில் முழு வெற்றியையும் பெற்ற எம் ஜி ஆரின் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம்தான் “தாய் சொல்லைத் தட்டாதே”.

1956ம் ஆண்டு “தாய்க்குப் பின் தாரம்” என்ற ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படத்தை எம் ஜி ஆரை வைத்து தயாரித்திருந்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர், தனது “தேவர் பிலிம்ஸ்” சார்பில் எம் ஜி ஆரை நாயகனாக வைத்து தயாரித்த இரண்டாவது திரைப்படம்தான் இந்த “தாய் சொல்லைத் தட்டாதே”. 1961ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த இத்திரைப்படம்தான் எம் ஜி ஆருக்காக வசனகர்த்தா ஆரூர்தாஸ் வசனம் எழுதிய முதல் திரைப்படம்.

இதற்கு முன்னர் சிவாஜியின் “பாசமலர்” என்ற ஒரு வெள்ளிவிழா திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்திருந்த இவருக்கு, சிவாஜியின் படத்திற்கு வசனம் எழுதியதால் தன்னைப் பற்றி எம் ஜி ஆர் என்ன நினைப்பாரோ என்ற எண்ணம் மனதில் தோன்றி மறைந்து கொண்டிருக்கையில், ஒரு நாள் எம் ஜி ஆருக்கு வசனத்தைப் படித்துக் காட்டு என படத்தின் தயாரிப்பாளர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் அவரிடம் சொல்ல, ஆரூர்தாஸூம் எம் ஜி ஆருக்கான வசனத்தைப் படித்துக் காண்பித்தார்.

அந்த வசனம், “எங்க அப்பா இறந்ததுக்கப்புறம் எங்க அம்மா எந்த மங்கல காரியத்திலேயும் பங்கெடுத்துக்கிறது வழக்கம் இல்லை, பொதுவா கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுணம்னு சொல்லுவாங்க, ஆனா நான் விடிஞ்சதும் முதலில் எங்கம்மா முகத்துலதான் விழிக்கிறேன். அதுனாலதான் எனக்கு வெற்றி மேல வெற்றி கிடைக்குது. எனக்கு எப்பவும் தாய்தான் தெய்வம்! அந்த தாய் சொல்லைத் தட்டமாட்டேன்” என எம் ஜி ஆர் பேசி நடிக்க வேண்டிய வசனத்தை ஆரூர்தாஸ் படித்துக் காட்டியதும், உடனே எம் ஜி ஆர் மீண்டும் ஒரு முறை படித்துக் காட்டு என அவரைப் பார்த்துக் கூற, ஆரூர்தாஸ் மீண்டும் ஒரு முறை படித்துக் காட்டியவுடன், நீங்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவரா? என்று எம் ஜி ஆர் அவரைப் பார்த்துக் கேட்க, அவரும் ஆம் என பதில் தந்திருக்கின்றார்.

தாயைப் பற்றி நீங்க எழுதியிருக்கின்ற இந்த வசனம் வார்த்தைக்கு வார்த்தை எனக்கு பொருந்துகின்றது. இது எனக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கு. என் தாய்தான் எனக்கு தெய்வம். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என கூறியதைத் தொடர்ந்து அவரது பல வெற்றித் திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பினையும், அவரது அன்பினையும் பெற்றவரானார் ஆரூர்தாஸ். 1961ம் ஆண்டு நவம்பர் 7 அன்று, தீபாவளி வெளியீடாக வந்த “தாய் சொல்லைத் தட்டாதே” திரைப்படம் 100 நாள்களுக்கும் மேல் ஓடி, பெறும் வெற்றியை பெற்றுத் தந்தது “தேவர் பிலிம்ஸ்” நிறுவனத்திற்கு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அன்பு கட்டளை போட்ட தபு ; 100வது படத்தில் கிரீன் சிக்னல் கொடுத்த நாகார்ஜுனாஅன்பு கட்டளை போட்ட தபு ; 100வது ... இயக்குனர் ஏ.வெங்கடேசை தெரியாது என சொன்ன பாலா.. ராஜூமுருகன் சைக்கோவா? சசிகுமார் பதில்... இயக்குனர் ஏ.வெங்கடேசை தெரியாது என ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap