விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா |
நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்தின் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில், சந்து மொன்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டேல்'.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் 2018ல் குஜராத்தில் மீன்பிடி தொழில் செய்த போது தவறுதலாக பாகிஸ்தான் கடல் பகுதியில் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட அவர்கள் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜ் கடும் முயற்சிகளுக்குப் பிறகு அவர்களை மீட்டு கொண்டு வந்தார். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டுதான் 'தண்டேல்' படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த மீனவர்களில் 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கித்தான் 'தண்டேல்' படம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
20 பக்க அளவிலான கதையைக் கொடுத்த இயக்குனர் சந்து அதை இரண்டரை மணி நேர உணர்வுபூர்மான படமாக எடுத்திருக்கிறார் என படத்தின் நாயகி சாய் பல்லவியும் இயக்குனரைப் பாராட்டியுள்ளார்.
காதலும், தேசப்பற்றும் கலந்த படமாக 'தண்டேல்' படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது.