தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்தின் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில், சந்து மொன்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டேல்'.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் 2018ல் குஜராத்தில் மீன்பிடி தொழில் செய்த போது தவறுதலாக பாகிஸ்தான் கடல் பகுதியில் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட அவர்கள் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜ் கடும் முயற்சிகளுக்குப் பிறகு அவர்களை மீட்டு கொண்டு வந்தார். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டுதான் 'தண்டேல்' படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த மீனவர்களில் 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கித்தான் 'தண்டேல்' படம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
20 பக்க அளவிலான கதையைக் கொடுத்த இயக்குனர் சந்து அதை இரண்டரை மணி நேர உணர்வுபூர்மான படமாக எடுத்திருக்கிறார் என படத்தின் நாயகி சாய் பல்லவியும் இயக்குனரைப் பாராட்டியுள்ளார்.
காதலும், தேசப்பற்றும் கலந்த படமாக 'தண்டேல்' படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது.




