பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான லப்பர் பந்து படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுவாசிகா. 15 வருடங்களுக்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் மலையாள திரை உலகிற்கு சென்று முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பினார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
அதேசமயம் கடந்த வருடம் ஜனவரி மாதம் தனது காதலரும், சின்னத்திரை நடிகருமான கேரளாவைச் சேர்ந்த பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுவாசிகா. அப்போது அவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. தற்போது திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைவுற்ற நிலையில் நேற்று இந்து தமிழ் முறைப்படி மீண்டும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதேசமயம் இது உறவினர்கள், நண்பர்கள் என அழைத்து மிகப்பெரிய அளவில் நடைபெறாமல் இந்து முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பத்திற்காக, அதை நினைவாக வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷூட்டிங் போல இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். “ஷூட்டிங் என்றாலும் கூட நிஜமாகவே திருமணம் செய்தது போன்ற உணர்வு எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது” என சுவாசிகாவின் கணவர் பிரேம் ஜேக்கப் கூறியுள்ளார்.