கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் நுழைந்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துவிட்டார். தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகிவிட்டார். ஹிந்தியில் அவர் நடித்து வெளிவந்த 'அனிமல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்துயும், ஹிந்தியில் அதிகம் வசூலித்த 'புஷ்பா 2' படத்தின் வசூலும் அவரை டாப் நடிகையாக்கிவிட்டது.
ராஷ்மிகா மந்தனா தற்போது சரித்திரப் படமான 'சாவா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. யு டியுப் தளத்தில் 35 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மராட்டிய மன்னரான சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இப்படத்தில் மகாராணி யேசுபாய் என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். அடுத்த மாதம் 14ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா எப்படி மராட்டிய மகாராணியாக நடிக்கத் தேர்வு செய்தீர்கள் என இயக்குனர் லஷ்மண் உடேகரிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு அவர், “ராஷ்மிகாவின் கண்களில் ஒரு தூய்மை இருக்கும்,” என்று பதிலளித்துள்ளார். ஹிந்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அடுத்த படமாக 'சாவா' படம் இருக்கிறது.