ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் நுழைந்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துவிட்டார். தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகிவிட்டார். ஹிந்தியில் அவர் நடித்து வெளிவந்த 'அனிமல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்துயும், ஹிந்தியில் அதிகம் வசூலித்த 'புஷ்பா 2' படத்தின் வசூலும் அவரை டாப் நடிகையாக்கிவிட்டது.
ராஷ்மிகா மந்தனா தற்போது சரித்திரப் படமான 'சாவா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. யு டியுப் தளத்தில் 35 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மராட்டிய மன்னரான சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இப்படத்தில் மகாராணி யேசுபாய் என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். அடுத்த மாதம் 14ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா எப்படி மராட்டிய மகாராணியாக நடிக்கத் தேர்வு செய்தீர்கள் என இயக்குனர் லஷ்மண் உடேகரிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு அவர், “ராஷ்மிகாவின் கண்களில் ஒரு தூய்மை இருக்கும்,” என்று பதிலளித்துள்ளார். ஹிந்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அடுத்த படமாக 'சாவா' படம் இருக்கிறது.