22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. இடையில் ஒரு படத்தை தயாரிக்க போய் அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இருப்பினும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். சில மாதங்களாக இவர் வாடகை தரவில்லை என ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக கஞ்சா கருப்புக்கும், ரமேஷிற்கும் பிரச்னை உருவாகி இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டனர்.
ரமேஷ் அளித்துள்ள புகாரில் ‛‛கஞ்சா கருப்பு ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். வீட்டை வேறு ஒரு நபருக்கு உள் வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடத்துகிறார். வீட்டை காலி பண்ண சொல்லியும், வாடகை தரச் சொல்லி கேட்டால் மிரட்டல் விடுக்கிறார்'' என தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க கஞ்சா கருப்பு அளித்துள்ள புகாரில், நான் வீட்டில் இல்லாத சமயத்தில் உரிமையாளர் ரமேஷ் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்துள்ளார். தனது உடைமைகளையும் சேதப்படுத்தி உள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே கஞ்சா கருப்பு தான் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு போலீஸ் உடன் சென்று பார்த்துள்ளார். அங்கு பொருட்கள் சேதமாகி இருப்பதாக கூறி இருக்கும் அவர், தனது கலைமாமணி பட்டத்தையும் காணவில்லை என்றும், 1.5 லட்சம் ரூபாய் பணம் காணவில்லை என போலீஸில் கதறி உள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.