இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் தர்ஷன். இவரது தோழி நடிகை பவித்ரா கவுடா. இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பவித்ரா கவுடாவிற்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச படங்கள், வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேரை பெங்களூரு காமாட்சி பாளையா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தர்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் பெங்களூரு உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி கர்நாடக போலீஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. கைதான 7 பேருக்கும் கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்றும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
மேலும் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கும், கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.