‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

மலையாள திரை உலகில் சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டன. அதில் கைது நடவடிக்கை, பின் ஜாமின், சிலவற்றில் ஆதாரம் இல்லை என நிறைய வழக்குகள் பிசுபிசுத்து போயின. அதேசமயம் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் இதேப்போல ஆண், பெண் பாரபட்சம் காட்டப்படுவதாக எதிர்ப்பு குரல் எழுப்பினார் பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ். ப்ரைடே பிலிம் ஹவுஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வரும் சான்ட்ரா தாமஸ் கடந்த நவம்பர் மாதம் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் ஆகியவற்றின் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால் அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அதே சமயம் அதன் பிறகு வந்த நாட்களில் இயக்குனர் சங்கத் தலைவராக இருக்கும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி உன்னிகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் மம்முட்டியின் ஆஸ்தான பட தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் இருவரும் சான்ட்ரா தாமஸ் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சான்ட்ரா தாமஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.