காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
மலையாள திரை உலகில் சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டன. அதில் கைது நடவடிக்கை, பின் ஜாமின், சிலவற்றில் ஆதாரம் இல்லை என நிறைய வழக்குகள் பிசுபிசுத்து போயின. அதேசமயம் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் இதேப்போல ஆண், பெண் பாரபட்சம் காட்டப்படுவதாக எதிர்ப்பு குரல் எழுப்பினார் பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ். ப்ரைடே பிலிம் ஹவுஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வரும் சான்ட்ரா தாமஸ் கடந்த நவம்பர் மாதம் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் ஆகியவற்றின் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால் அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அதே சமயம் அதன் பிறகு வந்த நாட்களில் இயக்குனர் சங்கத் தலைவராக இருக்கும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி உன்னிகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் மம்முட்டியின் ஆஸ்தான பட தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் இருவரும் சான்ட்ரா தாமஸ் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சான்ட்ரா தாமஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.