இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் தர்ஷன். இவரது தோழி நடிகை பவித்ரா கவுடா. இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பவித்ரா கவுடாவிற்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச படங்கள், வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேரை பெங்களூரு காமாட்சி பாளையா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தர்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் பெங்களூரு உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி கர்நாடக போலீஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. கைதான 7 பேருக்கும் கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்றும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
மேலும் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கும், கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.