நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தெலுங்கு சீனியர் நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிப்பில், வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் படம் 'சங்கராந்தி வஸ்துனம்'. இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இவர் மகேஷ்பாபுவை வைத்து 2020ல் 'சரிலேறு நீக்கெவரு', வெங்கடேஷை வைத்து 'எப்2' மற்றும் 'எப்3' என இரண்டு ஹிட் படங்களையும் கொடுத்தவர். கடந்த 2023ல் பாலகிருஷ்ணாவை வைத்து 'பகவந்த் கேசரி' என்கிற ஆக்சன் படத்தை கொடுத்தவர். தற்போது இந்த சங்கராந்தி வஸ்துனம் படத்தையும் கமர்சியல் ஆக்சன் படமாகவே உருவாக்கி உள்ளாராம்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அனில் ரவிபுடி பேசும்போது, “ஏற்கனவே எப்2 மற்றும் எப்3 என காமெடி டிராக்கில் பயணித்த நான் அதை விட்டு மாறுவோம் என்று தான் பகவந்த் கேசரி படம் பண்ணினேன். அதேபோல இன்னொரு படம் பண்ண வேண்டும் என்றுதான் நடிகர் சிரஞ்சீவிக்கு என ஒரு கதையை எழுதினேன். அவருக்கும் அந்த கதை பிடித்திருந்தாலும் அவர் ஏற்கனவே சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால் அவரால் இதில் நடிக்க தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அந்த சமயத்தில் தான் வெங்கடேஷிடம் இந்த கதையை கூறினேன். அவரும் உடனே நடிக்க சம்மதித்தார்” என்று கூறியுள்ளார்.