சிம்புவின் 51வது படத்தை தயாரிப்பதை உறுதிப்படுத்திய அர்ச்சனா கல்பாத்தி | தோழிகளுடன் இலங்கைக்கு டூர் சென்ற ராஷ்மிகா மந்தனா | பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்து அர்ச்சனா கல்பாத்தி தந்த அப்டேட்! | தனுஷ் - வினோத் கூட்டணி படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியின் பிலிம் செட்டை பார்வையிட விரும்பும் ஜேம்ஸ் கேமரூன் | 2025ல் அதிகம் ரசித்து பார்க்கப்பட்ட தமிழ் பாடல்கள்… | பிளாஷ்பேக்: சாண்டோ சின்னப்ப தேவர், எம் ஜி ஆர் இருவரின் நட்பிற்கு ஆணிவேராய் அமைந்த “ராஜகுமாரி” | பீரியட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் : பரூக் ஜே.பாஷா ஆசை | மகனை நடிகனாக்கிய தயாரிப்பாளர் | தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் |

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருபவர். சமீபத்தில் அவரது நீண்ட வருட காதலர் ஆண்டனியை மணந்தார். இதன்பிறகு படங்களில் நடிப்பாரா என்பது குறித்து தெரியவில்லை.
தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்தாலும் அவர் முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் தெலுங்கில் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றை மையமாக உருவான மகாநடி படம் தான். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முதலில் மகாநடி படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
அது ஏன் என அவர் கூறியதாவது, ‛‛மகாநடி படத்தின் கதையை நாக் அஸ்வின் என்னிடம் கூறியபோது சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க பயந்து மறுத்துவிட்டேன். அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நான் ஏன் நடிக்க மறுத்தேன் என கேட்டபோது, அந்த கதாபாத்திரத்தை என்னால் சரியாக திரையில் கொண்டுவர முடியுமா? இல்லையா? என்ற பயம் மற்றும் தயகத்தினால் அதை நிராகரித்தேன் என கூறினேன். பின்னர் அனைவரும் தந்த ஊக்கத்தினால் நடித்தேன்'' என்றார்.




