தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருபவர். சமீபத்தில் அவரது நீண்ட வருட காதலர் ஆண்டனியை மணந்தார். இதன்பிறகு படங்களில் நடிப்பாரா என்பது குறித்து தெரியவில்லை.
தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்தாலும் அவர் முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் தெலுங்கில் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றை மையமாக உருவான மகாநடி படம் தான். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முதலில் மகாநடி படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
அது ஏன் என அவர் கூறியதாவது, ‛‛மகாநடி படத்தின் கதையை நாக் அஸ்வின் என்னிடம் கூறியபோது சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க பயந்து மறுத்துவிட்டேன். அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நான் ஏன் நடிக்க மறுத்தேன் என கேட்டபோது, அந்த கதாபாத்திரத்தை என்னால் சரியாக திரையில் கொண்டுவர முடியுமா? இல்லையா? என்ற பயம் மற்றும் தயகத்தினால் அதை நிராகரித்தேன் என கூறினேன். பின்னர் அனைவரும் தந்த ஊக்கத்தினால் நடித்தேன்'' என்றார்.