புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
லலிதா, பத்மினி, ராகினி வரிசையில் சினிமாவுக்கு வந்த சகோதரிகள் கே.ஆர். விஜயா, கே.ஆர்.சாவித்திரி, கே. ஆர்.வத்சலா. முதல் மூன்று சகோதரிகளில் பத்மினி மட்டுமே வெற்றி பெற்றார். இரண்டாவது வரிசை சகோதரிகளில் கே.ஆர். விஜயா மட்டுமே பெரியளவில் வெற்றி பெற்றார்.
மூவரின் தந்தை தெலுங்கர், தாய் மலையாளி. பிறந்தது திருத்தணியில். கோவில் திருவிழா மேடைகளில் ஆடிக்கொண்டிருந்த கே.ஆர் விஜயாவை கற்பகம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் . பிற்காலத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்தான் கே.ஆர்.சாவித்திரி. 1970ம் ஆண்டு 'ரக்த புஷ்பம்' என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.
அதன் பிறகு 1985ம் ஆண்டில் யாத்ரா மற்றும் சாந்தம் பீகாரம், 1986ம் ஆண்டில் படையணி மற்றும் தேசதனக்கிளி, கரையறியில்லா போன்ற பல படங்களில் நடித்தார். மலையாள படத்தில் நடித்து வந்த சாவித்திரி 1990ம் தமிழில் அறிமுகமானார். தாலாட்டு பாடவா, சேலம் விஷ்ணு, மனைவி ஒரு மந்திரி, தங்கமான ராசா, தாலாட்டுப் பாடவா, தாலி கட்டிய ராசா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்த கேஆர் சாவித்திரி அதன் பின்னர் அக்கா அண்ணி உள்ளிட்ட வேடங்களில் குணச்சித்திர நடிகை ஆனார். 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள கே.ஆர்.விஜயா நாயகியாக மட்டுமே 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.