பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'கண்ணன் வருவான், வேதம், பாளையத்தம்மன், சபாஷ்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர், பின்னர் கணவருடன் சர்ச்சை ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்து மறு திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும் அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான அவர், தற்போது அமெரிக்காவில் நடனப் பள்ளி ஒன்றும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 11,600 பரதநாட்டிய கலைஞர்களை ஒன்றிணைத்து எட்டு நிமிட பாடல் ஒன்றுக்கு அழகாக நடனமாடி புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார் திவ்யா உன்னி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டிய மங்கைகள் அனைவருமே ஒரே நிறத்தில் உடை அணிந்து இருந்தது கூடுதல் ஆச்சரியம். அதுமட்டுமல்ல இதில் ஏழு வயது சிறுமி கூட பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதில் 10,176 பரதநாட்டிய கலைஞர்களும் சுமார் 500 பரதநாட்டிய ஆசிரியர்களும் இணைந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை கேரள கலாசாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் கூட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.