ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான 'புஷ்பா 2' டிசம்பர் 5ம் தேதியன்று பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கானா மாநிலத்திற்கான கட்டணத் தொகைக்கான அரசாணையை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 4ம் தேதிக்கான பிரிமியர் காட்சிகளுக்கான கட்டணத்தை ரூ.800 என நிர்ணயித்துள்ளார்கள்.
படம் வெளியாகும் தினமான டிசம்பர் 5ம் தேதிக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கும், டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிக்கான இரண்டு கூடுதல் காட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ளார்கள்.
சிங்கிள் தியேட்டர்களில் டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.150ம், 9ம் தேதி முதல் 16ம் தேதிவரை ரூ.105ம், 17ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை ரூ.20 உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.200ம், 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரூ.150ம், 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரூ.50ம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம். அவற்றிற்கான ஜிஎஸ்டியும் தனி.
தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில அரசு என்ன அரசாணை வெளியிடப் போகிறது என திரையுலகினர் காத்திருக்கிறார்கள். ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலின் போது அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் இடையிலான மறைமுகமான மோதல் ஏற்பட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.