ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான 'புஷ்பா 2' டிசம்பர் 5ம் தேதியன்று பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கானா மாநிலத்திற்கான கட்டணத் தொகைக்கான அரசாணையை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 4ம் தேதிக்கான பிரிமியர் காட்சிகளுக்கான கட்டணத்தை ரூ.800 என நிர்ணயித்துள்ளார்கள்.
படம் வெளியாகும் தினமான டிசம்பர் 5ம் தேதிக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கும், டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிக்கான இரண்டு கூடுதல் காட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ளார்கள்.
சிங்கிள் தியேட்டர்களில் டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.150ம், 9ம் தேதி முதல் 16ம் தேதிவரை ரூ.105ம், 17ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை ரூ.20 உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.200ம், 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரூ.150ம், 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரூ.50ம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம். அவற்றிற்கான ஜிஎஸ்டியும் தனி.
தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில அரசு என்ன அரசாணை வெளியிடப் போகிறது என திரையுலகினர் காத்திருக்கிறார்கள். ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலின் போது அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் இடையிலான மறைமுகமான மோதல் ஏற்பட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.