'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

சமீபத்தில் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரலாற்று பேண்டஸி படமாக கங்குவா திரைப்படம் வெளியானது. படத்தின் கதை அம்சம் ரொம்பவே சுமாராக இருந்தது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் பலரும் ஒருமித்த குரலில் கூறியது இந்த படத்தில் பின்னணி இசை என்கிற பெயரில் படம் முழுவதும் சத்தம் இருந்து கொண்டே இருந்தது. எப்போதாவது சத்தம் இல்லாமல் இருந்தால் அது தான் எங்களுக்கு ரிலாக்ஸ் என தோன்றியது என்று பலரும் கூறும் அளவிற்கு பின்னணி இசையிலும் இசை கோர்ப்பிலும் அதிக அளவிலான சத்தம் ரசிகர்களை மிகவும் துன்புறுத்தி விட்டது என்றே உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
ஒரு பக்கம் அவரது இசையமைப்பு அல்லது தவறான ஒலிக்கலவை அல்லது திரையரங்குகளில் ஒலியை சரியாக டியூன் செய்யாதது என மாற்றி மாற்றி இதற்கு காரணம் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது புஷ்பா 2 படத்தின் ஒலிக்கலவை பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருக்கிறார். அதேசமயம் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட இன்னும் ஒரு சிலரும் தங்களது பங்களிப்பை இதில் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் புஷ்பா 2 வெளியாகும்போது கங்குவா படத்திற்கு கிடைத்தது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் இதன் இசைக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். “புஷ்பா 2 டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. உங்களது திரையரங்கில் ஆம்ப்ளிபையர் மற்றும் ஸ்பீக்கர்களை முறையாக இப்போதே டெஸ்ட் செய்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ரசூல் பூக்குட்டி திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.