'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமீபத்தில் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரலாற்று பேண்டஸி படமாக கங்குவா திரைப்படம் வெளியானது. படத்தின் கதை அம்சம் ரொம்பவே சுமாராக இருந்தது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் பலரும் ஒருமித்த குரலில் கூறியது இந்த படத்தில் பின்னணி இசை என்கிற பெயரில் படம் முழுவதும் சத்தம் இருந்து கொண்டே இருந்தது. எப்போதாவது சத்தம் இல்லாமல் இருந்தால் அது தான் எங்களுக்கு ரிலாக்ஸ் என தோன்றியது என்று பலரும் கூறும் அளவிற்கு பின்னணி இசையிலும் இசை கோர்ப்பிலும் அதிக அளவிலான சத்தம் ரசிகர்களை மிகவும் துன்புறுத்தி விட்டது என்றே உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
ஒரு பக்கம் அவரது இசையமைப்பு அல்லது தவறான ஒலிக்கலவை அல்லது திரையரங்குகளில் ஒலியை சரியாக டியூன் செய்யாதது என மாற்றி மாற்றி இதற்கு காரணம் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது புஷ்பா 2 படத்தின் ஒலிக்கலவை பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருக்கிறார். அதேசமயம் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட இன்னும் ஒரு சிலரும் தங்களது பங்களிப்பை இதில் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் புஷ்பா 2 வெளியாகும்போது கங்குவா படத்திற்கு கிடைத்தது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் இதன் இசைக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். “புஷ்பா 2 டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. உங்களது திரையரங்கில் ஆம்ப்ளிபையர் மற்றும் ஸ்பீக்கர்களை முறையாக இப்போதே டெஸ்ட் செய்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ரசூல் பூக்குட்டி திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.