கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

சமீபத்தில் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரலாற்று பேண்டஸி படமாக கங்குவா திரைப்படம் வெளியானது. படத்தின் கதை அம்சம் ரொம்பவே சுமாராக இருந்தது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் பலரும் ஒருமித்த குரலில் கூறியது இந்த படத்தில் பின்னணி இசை என்கிற பெயரில் படம் முழுவதும் சத்தம் இருந்து கொண்டே இருந்தது. எப்போதாவது சத்தம் இல்லாமல் இருந்தால் அது தான் எங்களுக்கு ரிலாக்ஸ் என தோன்றியது என்று பலரும் கூறும் அளவிற்கு பின்னணி இசையிலும் இசை கோர்ப்பிலும் அதிக அளவிலான சத்தம் ரசிகர்களை மிகவும் துன்புறுத்தி விட்டது என்றே உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
ஒரு பக்கம் அவரது இசையமைப்பு அல்லது தவறான ஒலிக்கலவை அல்லது திரையரங்குகளில் ஒலியை சரியாக டியூன் செய்யாதது என மாற்றி மாற்றி இதற்கு காரணம் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது புஷ்பா 2 படத்தின் ஒலிக்கலவை பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருக்கிறார். அதேசமயம் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட இன்னும் ஒரு சிலரும் தங்களது பங்களிப்பை இதில் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் புஷ்பா 2 வெளியாகும்போது கங்குவா படத்திற்கு கிடைத்தது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் இதன் இசைக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். “புஷ்பா 2 டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. உங்களது திரையரங்கில் ஆம்ப்ளிபையர் மற்றும் ஸ்பீக்கர்களை முறையாக இப்போதே டெஸ்ட் செய்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ரசூல் பூக்குட்டி திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.