சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். ரசிகர்களின் வரவேற்பை பெற்று 3வது வாரத்தை கடந்து ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. அதே சமயம் இந்த அமரன் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது போன்று காட்சிகள் இருப்பதாக சொல்லி சமீபத்தில் சில இஸ்லாமிய அமைப்புகள் அமரன் படம் ஓடிய தியேட்டர்களும் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் அமரன் படம் ஓடிக்கொண்டிருந்த போது அந்த தியேட்டர் வாசலில் யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளார்கள். இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் வெடிகுண்டு வீசிய நபர்களை தேடி வருகிறார்கள்.