கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். ரசிகர்களின் வரவேற்பை பெற்று 3வது வாரத்தை கடந்து ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. அதே சமயம் இந்த அமரன் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது போன்று காட்சிகள் இருப்பதாக சொல்லி சமீபத்தில் சில இஸ்லாமிய அமைப்புகள் அமரன் படம் ஓடிய தியேட்டர்களும் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் அமரன் படம் ஓடிக்கொண்டிருந்த போது அந்த தியேட்டர் வாசலில் யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளார்கள். இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் வெடிகுண்டு வீசிய நபர்களை தேடி வருகிறார்கள்.




