ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, புலி, வேதாளம், லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் ரஜினியின் மகளாக பிரீத்தி என்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பெற்றோர் குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ''கமல்ஹாசன், சரிகாவின் மகளாக இருப்பது எனக்கு பெருமை தான். அதே சமயம் என்னை அனைவருமே கமலின் மகள் என்றுதான் கூறுகிறார்கள். என் தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக உள்ளது. அதனால் எனக்கு என்று ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறேன்,'' என்று கூறியிருக்கும் ஸ்ருதிஹாசன், ''எனது பெற்றோர் பிரிந்த பிறகு அம்மாவுடன் நானும் மும்பைக்கு சென்று விட்டேன். அவர்கள் இருவரும் பிடிவாதமாக பிரிந்து வாழ்வது வருவது என்னையும் எனது தங்கை அக்ஷராவையும் பெரிய அளவில் பாதித்துள்ளது,'' என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.