மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை சாய் பல்லவி கடந்த 10 வருடங்களில் அந்த புகழால் எத்தனையோ படங்களில் நடித்திருக்க முடியும். ஆனால் தனக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து குறைவான எண்ணிக்கையிலேயே படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைக்கும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் என்ஜிகே படத்தில் இருந்து தான் விலக நினைத்ததையும் அதை தனுஷ் தடுத்ததையும் பற்றி கூறியுள்ளார் சாய்பல்லவி. இதுபற்றி அவர் கூறும்போது, “நான் செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தபோது துவக்க நாட்களில் ரொம்பவே அன் ஈசியாக உணர்ந்தேன். காரணம் செல்வா சார் காட்சிகளை படமாக்கியதும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா இல்லையா என்பது பற்றி எந்த கருத்துமே சொல்ல மாட்டார். இதனால் சில நாட்களில் அந்த படத்தில் இருந்து வெளியேறி விடலாமா என்று கூட நினைத்தேன்.
அப்போது தனுஷ் என்னிடம் என் ஜி கே படப்பிடிப்பு எப்படி போகிறது இன்று விசாரித்தபோது அவரிடம் இந்த விஷயத்தை கூறினேன். அவர் உடனே இதற்கெல்லாம் வருத்தப்பட வேண்டாம் செல்வா அண்ணன் நம்மை இப்படித்தான் டெஸ்ட் பண்ணுவார். நீ கவலைப்படாமல் நடி” என்று கூறினார். அதன் பிறகு அந்த படத்தில் பாசிட்டிவ் அணுகுமுறையுடன் நடிக்க துவங்கினேன். நடிகர் சூர்யாவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்” என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.




