சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் |

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. பேமிலி ஸ்டார் படத்திற்கு பின் கல்கி படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். தற்போது அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார். இப்போது ‛ஷியாம் சிங்கா ராய்' பட இயக்குனர் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாக உருவாகும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு துவங்குகிறது. 1850ம் ஆண்டு காலகட்ட படமாக கதை உருவாகிறது.
தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஹாலிவுட்டில் வெளியான ‛மம்மி' சீரியஸ், ‛டார்க் மேன்' சீரியஸ் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.