தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. பேமிலி ஸ்டார் படத்திற்கு பின் கல்கி படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். தற்போது அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார். இப்போது ‛ஷியாம் சிங்கா ராய்' பட இயக்குனர் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாக உருவாகும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு துவங்குகிறது. 1850ம் ஆண்டு காலகட்ட படமாக கதை உருவாகிறது.
தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஹாலிவுட்டில் வெளியான ‛மம்மி' சீரியஸ், ‛டார்க் மேன்' சீரியஸ் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.