ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
மலையாளத்தில்
'தள்ளுமாலா', 'உண்டா', 'ஒன்', 'ஆப்ரேஷன் ஜாவா', 'சாவேர்' உள்ளிட்ட பல்வேறு
படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் நிஷாத் யூசுப் (வயது 43). இதில்
2022ல் தள்ளுமாலா படத்திற்காக கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான
விருதினையும் வென்றிருந்தார். தற்போது தயாராகி வரும் மோகன்லால் மற்றும்
மம்முட்டி படங்களுக்கும் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
அதேபோல்,
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து, நவம்பர் 14ல்
வெளியாகவுள்ள 'கங்குவா' படத்திற்கும் எடிட்டராக இருந்துள்ளார். சூர்யா,
அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கப்போகும் 'சூர்யா 45'
படத்திற்கும் இவர் தான் எடிட்டர். இந்த நிலையில், கொச்சி பனம்பில்லி நகரில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (அக்.,30) அதிகாலை 2 மணியளவில் இறந்து கிடந்தார். அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை
நிஷாத் யூசப், குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
![]() |