'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

மலையாளத்தில்
'தள்ளுமாலா', 'உண்டா', 'ஒன்', 'ஆப்ரேஷன் ஜாவா', 'சாவேர்' உள்ளிட்ட பல்வேறு
படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் நிஷாத் யூசுப் (வயது 43). இதில்
2022ல் தள்ளுமாலா படத்திற்காக கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான
விருதினையும் வென்றிருந்தார். தற்போது தயாராகி வரும் மோகன்லால் மற்றும்
மம்முட்டி படங்களுக்கும் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
அதேபோல்,
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து, நவம்பர் 14ல்
வெளியாகவுள்ள 'கங்குவா' படத்திற்கும் எடிட்டராக இருந்துள்ளார். சூர்யா,
அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கப்போகும் 'சூர்யா 45'
படத்திற்கும் இவர் தான் எடிட்டர். இந்த நிலையில், கொச்சி பனம்பில்லி நகரில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (அக்.,30) அதிகாலை 2 மணியளவில் இறந்து கிடந்தார். அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை
நிஷாத் யூசப், குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
![]() |




