பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த அஜித்தின் 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி நடந்த போது, ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து விழுந்து அகால மரணமடைந்தார். அதன்பிறகு அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.
புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் காலை 9 மணிக்கு மட்டுமே காட்சிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது கடந்த சில வருடங்களாக அதிகாலை காட்சியைப் பார்த்துப் பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு 9 மணி வரை காத்திருக்க பொறுமையில்லாமல் இருக்கிறது.
இதனிடையே, தமிழ் சினிமாவில் புது டிரென்ட் ஆக பிரிமீயர் காட்சி நடைமுறை இன்று ஆரம்பமாகிறது. அதுவும் நேரடி தமிழ்ப் படங்களுக்கு ஆரம்பமாகாமல் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வந்துள்ள 'லக்கி பாஸ்கர்' படம் மூலம் ஆரம்பமாகிறது. இந்த மாதிரியான பிரிமீயர் காட்சிகள், 'பெய்டு பிரிமீயர் காட்சிகள்' என அமெரிக்காவில் நடைபெறுவது வழக்கம். அதைத் தற்போது இங்கு கொண்டு வந்துள்ளார்கள்.
இன்று மாலை மற்றும் இரவுக் காட்சிகளாக துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படம் 11 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட மாநகரங்களில் இந்த பிரிமீயர் காட்சி நடைபெற உள்ளது. இந்த டிரென்ட்டை தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் பின்பற்றுவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.
அதிகாலை காட்சிகளுக்கு இனிமேல் அரசு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, இது போன்ற பிரிமீயர் காட்சிகளை நடத்தி அதிக ஆர்வத்துடன் படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களிடமிருந்து வசூல் செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு. இதையே ரசிகர் மன்ற காட்சிகளாகவும் நடத்தினால் 1000, 2000 என அதிக டிக்கெட் கட்டணம் வைத்தும் வசூலிக்கலாம். மலையாள நடிகர் நடித்த தெலுங்குப் படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இப்படி ஒரு புது வழியை காட்டியுள்ளது.
இந்த வழியை தமிழ் சினிமாத் துறையினரும் பின்பற்றுவார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.