பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! |
கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‛காந்திகண்ணாடி' படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் நேற்று நடந்தது. அதில் பாலா நண்பர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். படம் பார்த்துவிட்டு ம.கா.பா ஆனந்த் பேசுகையில் ''முதல் படத்திலேயே இப்படியொரு நல்ல படம் பாலாவுக்கு கிடைத்தது. இந்த படத்தில் தொடர்ந்து சிரிக்க வைத்தார்கள், அப்புறம் யோசிக்க வைத்தார்கள். கடைசியில் அழ வைத்து விட்டார்கள். பணத்துக்காக எதையும் இழக்காதீர்கள், உறவுகளை மதியுங்கள் என்ற கரு நல்லா இருக்குது'' என்றார்.
விஜய் டிவி பிரியங்கா பேசுகையில், ‛‛அவனின் ஆரம்ப கால வாழ்கையில் இருந்து இப்போதுவரை பார்த்து இருக்கிறேன். இந்த படத்தை பார்க்கையில் அவ்வளவு சந்தோசம். சினிமாவிலும் கூட இருப்பவர்களுக்கு உதவுகிறார். அவன் நல்லவன் என்பதை படம் பார்க்கும்போது தெரிகிறது. என்னை ஒரு கட்டத்தில் அவன் அழ வைத்துவிட்டான். அமுதவாணன் அண்ணனும் படத்தில் இருக்கிறார்'' என்றார்.
அமுதவாணன் பேசுகையில் ''சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி இந்த இடத்துக்கு வந்து இருக்கிறார் பாலா. எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி'' என்றார்.
பாலா பேசுகையில் ‛‛ஒன்றே கால் ஆண்டுகளாக கஷ்டப்பட்டு போராடி காந்திகண்ணாடியை எடுத்தோம். நான் இங்கே இருக்க முக்கிய காரணம், தமிழ் மக்கள் போட்ட பிச்சை. நான் இன்று ரொம்பவே எமோசனாக இருக்கிறேன்'' என்றார்.