கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன். அதனை தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனராகவும் மாறிய அவர் பஹத் பாசிலை வைத்து டேக் ஆப், சி யூ சூன், மாலிக் மற்றும் உயரே உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா என மலையாள சினிமாவில் முன்னனி நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஒன்லைனை சல்மான் கானிடம் அவர் சொல்லிவிட்டதாகவும் அது சல்மான்கானுக்கு பிடித்து விட்டதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்துவிட்டு தன்னிடம் வருமாறு கூறியுள்ளார் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சல்மான் கானின் சகோதரியும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.