நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன். அதனை தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனராகவும் மாறிய அவர் பஹத் பாசிலை வைத்து டேக் ஆப், சி யூ சூன், மாலிக் மற்றும் உயரே உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா என மலையாள சினிமாவில் முன்னனி நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஒன்லைனை சல்மான் கானிடம் அவர் சொல்லிவிட்டதாகவும் அது சல்மான்கானுக்கு பிடித்து விட்டதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்துவிட்டு தன்னிடம் வருமாறு கூறியுள்ளார் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சல்மான் கானின் சகோதரியும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.