டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இயக்குனர் சிவாவின் தம்பியான நடிகர் பாலா, அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்தே உட்பட பல படங்களை நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் கடந்த 2010ல் பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் 2019ம் ஆண்டு விவாகரத்து செய்தார்கள்.
அதன் பிறகு எலிசபெத் உதயன் என்பவரை 2021ம் ஆண்டு திருமணம் செய்த நடிகர் பாலா, அவரையும் 2024ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்படியான நிலையில் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியான அம்ருதா தற்போது இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், தனது முன்னாள் கணவரான நடிகர் பாலா, தன்னையும் தனது மகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து இன்று காலை கேரளா போலீசார் நடிகர் பாலாவை கைது செய்துள்ளார்கள். அவர் மட்டுமின்றி பாலாவின் மேனேஜர் ராஜேஷ், நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.




