ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
இயக்குனர் சிவாவின் தம்பியான நடிகர் பாலா, அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்தே உட்பட பல படங்களை நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் கடந்த 2010ல் பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் 2019ம் ஆண்டு விவாகரத்து செய்தார்கள்.
அதன் பிறகு எலிசபெத் உதயன் என்பவரை 2021ம் ஆண்டு திருமணம் செய்த நடிகர் பாலா, அவரையும் 2024ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்படியான நிலையில் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியான அம்ருதா தற்போது இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், தனது முன்னாள் கணவரான நடிகர் பாலா, தன்னையும் தனது மகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து இன்று காலை கேரளா போலீசார் நடிகர் பாலாவை கைது செய்துள்ளார்கள். அவர் மட்டுமின்றி பாலாவின் மேனேஜர் ராஜேஷ், நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.