விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், தற்போது படத்தை 2025 சங்கராந்தி தினத்தில் வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றில் அறிவித்துள்ளார்.
“படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதை விட சங்கராந்தி தினத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என வினியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், சிரஞ்சீவி சாரின் 'விஷ்வம்பரா' படத்தையும் ஷங்கராந்தி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். கடந்த மூன்று வருடங்களாக 'கேம் சேஞ்சர்' படத்தை எடுத்து வருவது குறித்து சிரஞ்சீவியிடமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திடமும் பேசினோம். அவர்களது படமும் டிசம்பர் மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும். இருந்தாலும் எங்களுக்காக அப்படத்தை தள்ளி வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி,” என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் தில் ராஜு.
அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள படத்தின் வில்லன் எஸ்ஜே சூர்யா, “டபுள் ஷங்கர்-ஆந்தி” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.