தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
ஒரு நடிகராக தென்னிந்திய மொழிகளை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்திய நடிகர் தனுஷ் தனது டைரக்சன் ஆசைக்கும் தீனி போடும் விதமாக ப பாண்டி என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அடுத்ததாக அவர் இயக்கிய ராயன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்தையும் அவர் மூன்றாவதாக இயக்கி வருகிறார்.
அந்த படத்தின் வேலைகள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இட்லி கடை என்கிற தனது நான்காவது படத்தையும் இயக்கி வருகிறார் நடிகர் தனுஷ். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் தனுஷுடன் சேர்ந்து முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தேனியில் நடைபெறுகிறது.
நேற்று முன் தினம் சென்னையில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சியை கண்டுகளித்த தனுஷ் அன்றைய தினமே இட்லி கடை படப்பிடிப்பதற்காக தேனிக்கு கிளம்பி வந்துவிட்டார். இந்த நிலையில் தனுஷ் ஒரு காட்சியை தன் அருகில் இருப்பவர்களுக்கு விவரித்து கூறும் விதமான ஒரு வீடியோ ஒன்று படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்துள்ளது. கிராமத்து தெருக்களில் தனுஷ் தற்போது காட்சிகளை படமாக்கி வருகிறார் என்பதை அந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.