கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு | தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் | ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' | பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! |
ஒரு காலகட்டத்தில் இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் இருவரின் படங்களில் நடிக்க விரும்புவது போல இயக்குனர் ராம்கோபால் வர்மா டைரக்ஷனில் நடிக்கவும் பல தென்னிந்திய ஹீரோக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் கால சூழலில் அவரது சினிமா ஆர்வம் வேறு திசையில் சென்று விட்டாலும் தான் கூறும் விமர்சன கருத்துக்களாலும் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய படங்களாலும் தொடர்ந்து பரபரப்பிலேயே தன்னை வைத்துக் கொண்டுள்ளார் ராம்கோபால் வர்மா. இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தானும் நடிகர் பஹத் பாசிலும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
உடனே ரசிகர்கள் இது குறித்து தங்களது பல்வேறு விதமான யூகங்களை பதிவிட துவங்கினர்.. குறிப்பாக அடுத்ததாக ராம் கோபால் வர்மா படத்தில் பஹத் பாசில் நடிக்க இருக்கிறார் என வழக்கம் போல கூற ஆரம்பித்தனர். ஆனால் தற்போது இந்த சந்திப்பு பின்னணி பற்றி கூறியுள்ள வர்மா, ஐதராபாத்தில் உள்ள டென் என்கிற தனது அலுவலகத்திற்கு பஹத் பாசில் தன்னை நேரில் வந்து சந்தித்தபோது எடுத்த படம் தான். இது எந்த ஒரு படப்பிடிப்புக்காகவும் அல்ல என்றும் கூறியுள்ளார்.
தற்போது தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் பஹத் பாசில் அங்கிருந்தபடியே ராம்கோபால் வர்மாவை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.