நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சினிமா தமிழகத்துக்குள் வந்ததும் முதலில் புராண கதைகள்தான் சினிமா ஆனது. பின்னர் சமூக கதைகள் வந்தது. இந்த வரிசையில் இப்போது கொண்டாடப்படும் பக்கா ஆக்ஷன் படமாக முதலில் வெளிவந்தது 'மெட்ராஸ் மெயில்' என்கிற படம். நாயகன், நாயகி, காதல், அதற்கு எதிராக ஒரு வில்லன். அந்த வில்லனை எதிர்த்து போராடும் ஹீரோ. காதலுக்கு டூயட் பாடல்கள், வில்லனோடு அனல் பறக்கும் சண்டை என்கிற இந்த பார்முலாவை தொடங்கி வைத்த படம் இது.
படத்தின் நாயகன் ரொம்ப நல்ல இளைஞர். எல்லோருக்கும் உதவி செய்யும் பரமோபகாரி. அவருக்கு ஜமீன்தார் மகளான நாயகிக்கும் முதலில் மோதல் உருவாகி பின்னர் அது காதலாகிறது. நாயகியின் அழகில் மயங்கும் மந்திரி ஒருவர் அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதற்கு இடையூறாக இருக்கும் ஹீரோ மீது பழிசுமத்தி சிறைக்கு அனுப்புகிறார். சிறையில் இருந்து தப்பும் ஹீரோ தனது பெயரை 'மெட்ராஸ் மெயில்' என்று மாற்றிக் கொண்டு அமைச்சரை பழிவாங்கி, நாயகியை மணந்து மக்களிடையே மெட்ராஸ் மெயில் என கொண்டாடப்படுகிற ஒருவராக மாறுகிறார். இதுதான் படத்தின் கதை. இதே கதையில் வரும் வாரம்கூட ஒரு படம் வரக் கூடும்.
1936ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சி.எம்.திரிவேதி இயக்கியிருந்தார் அப்போது தற்காப்பு கலைஞராக இருந்த பேட்டலிங் மணி என்பவர் நாயகனாக நடித்தார். அவரே கதையையும் எழுதியிருந்தார். நாயகியாக டி.என்.மீனாட்சி நடித்திருந்தார். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.