எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் |

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‛பிரதர்' படம் தீபாவளி வெளியீடாக அக்., 31ல் ரிலீஸாகிறது. ராஜேஷ் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுதவிர ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவியின் 34வது பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 'டாடா'. இவரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகும் இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என இன்று போஸ்டருடன் அறிவித்துள்ளனர். தமிழக வரைபடம் வடிவிலாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் ஜெயம் ரவியின் ஒரு பாதி முகம் கருப்பு, வெள்ளையிலும், மற்றொரு பாதி கலரிலும் உள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.