ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
பிரேம் குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மெய்யழகன்'. அப்படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடும் படமாக வெளியானது. ஆனால், படத்தைப் பார்த்த பலரும் படத்தின் நீளம் அதிகம் என்றும், தேவையற்ற சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கினால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், இயக்குனர் பிரேம்குமார் அப்படி காட்சிகளைக் குறைக்க சம்மதிக்கவில்லை, பிடிவாதம் பிடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் படத்திலிருந்து 18 நிமிடக் காட்சிகளை நீக்கிவிட்டு அதற்குரிய காரணத்தையும் கூறியிருந்தார் பிரேம்குமார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்தக் காட்சிகளைத் தூக்கியது குறித்துப் பேசியுள்ளார். “சூர்யா, கார்த்தி ஆகியோர் காட்சிகளைக் குறைக்கக் கூடாது என்று சொன்னார்கள். நம்ம புள்ளையையே மூக்கு சரியில்லை, காது சரியில்லன்னு சொல்லலாமா, என்ன எடுத்தோமோ அது அப்படியே போகட்டும்னு சொன்னாங்க. சூர்யா கிட்ட சொன்ன போது கொந்தளிக்கிறாரு. எதுக்கு அப்படியே இருக்கட்டும் எல்லாரும் ரசிக்கிறாங்க, நல்லா இருக்கிற விஷயத்தை ஏன் குறைக்கனும்னு கேட்டாரு.
ரசிக்கிறதும் ஒரு சதவீதம், ரசிக்காதவங்களும் இருக்காங்க. அவங்களையும் கணக்குல எடுத்துக்கணும். இந்த இரண்டும் சேர்ந்ததுதானே ரசிகர்கள். பிடிச்சவங்கதான் ஆடியன்ஸ், பிடிக்காதவங்க எப்படியோ போங்கன்னு சொல்ல முடியாது. மனசை கல்லாக்கிட்டுதான் அதை தூக்க வேண்டி இருந்தது. என்னைத் தவிர வேற யாருக்கும் அதுல உடன்பாடு இல்ல. சூர்யா அண்ணன் கோவிச்சிக்கல, அவருக்கு காட்சிகளை நீக்கினதுல உடன்பாடு இல்ல,” என்று விளக்கமளித்துள்ளார்.