மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
கடந்த ஜூலை மாதம் இறுதியில் கேரளாவில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் உயிர் பலியும் சேதமும் ஏற்பட்டது. அதற்கு முன்னதாகவே கடந்த ஜூலை 16 ம் தேதி கர்நாடக மாநிலம் ஷிரூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயம் பெல்காமிலிருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு ஓட்டி வந்த அர்ஜுன் என்கிற டிரைவர் லாரியுடன் அந்த நிலச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் 72 நாட்கள் கழித்து நேற்று கர்நாடகாவில் கெங்கவல்லி பகுதியில் லாரியில் இருந்த அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவரது குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை கர்நாடக அரசு செய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபல மலையாள திரையுலக நட்சத்திரங்களான மோகன்லால், மம்முட்டி, மஞ்சு வாரியர் ஆகியோரும் அர்ஜுனின் மறைவு குறித்து உருக்கமாக தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மம்முட்டி வெளியிட்டுள்ள பதிவில், “அர்ஜுன் எப்படியாவது திரும்பி வந்து விடுவார் என நாங்கள் காத்திருந்தோம். ஆனால் இன்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.
மோகன்லால் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “உனக்காக நாங்கள் எல்லோரும் தொடர்ந்து பிரார்த்தித்தோம். எங்கள் அனைவரின் அன்பிற்கு உரியவனாகவும் நீ மாறினாய். அன்பு சகோதரா உனக்கு என் இறுதி அஞ்சலி” என்று கூறியுள்ளார்.
அர்ஜுனின் சடலம் கைப்பற்ற செய்தி அறிந்து முதல் ஆளாக தனது இரங்கலை வெளிப்படுத்திய நடிகை மஞ்சு வாரியர் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “குறைந்தபட்சம் உன்னை தகனம் செய்து எரிப்பதற்காகவாவது உன்னை திரும்ப பெற்றோமே. ஒரு கைப்பிடி சாம்பல் உன்னை நினைவூட்டி கொண்டிருக்கும். அன்பு அர்ஜுன்.. மலையாளிகளின் இதயங்களில் நீ எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பாய்” என்று கூறியுள்ளார்.