விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி. இந்த நிலையில் தெலுங்கில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆர்டிஐ என்கிற படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி.
இந்த படத்தில் அவர் ஒரு மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரது தந்தையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவிசங்கருடன் ஒரு தற்கொலை வழக்கு சம்பந்தமாக நேருக்கு நேர் மோதுவது தான் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவே ஈடி.வி.வின் சேனலின் ஓடிடி தளத்தில் நேற்று (செப் 26) முதல் ஒளிபரப்பாகி உள்ளது.