ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
மலையாள திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் சவ்பின் சாஹிர். குறிப்பாக துல்கர் சல்மானின் நண்பராக அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள அவர் அடிப்படையில் உதவி இயக்குனரும் கூட. பின்னர் துல்கர் சல்மானை வைத்து பறவ என்கிற படத்தை இயக்கிய இயக்குனராக மாறினார்.
சமீப வருடங்களாக காமெடியில் இருந்து குணச்சித்திர நடிப்பிற்கும் மாறி உள்ள அவர் தயாரிப்பாளராகவும் மாறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படத்தை தயாரித்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்ததோடு பெயரும் வாங்கித் தந்தது.
இந்த நிலையில் நான் சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறியுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி. கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் 96 புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் மெய்யழகன். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கார்த்தி, அர்விந்த்சாமி இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது மலையாள சினிமாவைப் பற்றி அவர்கள் பேச்சு திரும்பியது.
அப்போது சவ்பின் சாஹிர் பற்றி குறிப்பிட்ட அரவிந்த்சாமி, “மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்கு முன்பே அதாவது கும்பலாங்கி நைட்ஸ் படத்திலேயே அவரது நடிப்பை நான் விரும்பி ரசித்தேன். அதன் பிறகு அவரது படங்களை தவறாமல் பார்த்து வருகிறேன்” என்றார்.
கார்த்தியும் அதை ஆமோதிப்பது போல கும்பலாங்கி நைட் ஒரு நல்ல படம். சவ்பின் சாஹிர் ஒரு நடிகராக மட்டுமல்ல ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக திறமை கொண்ட நபர்” என்று தன் பங்கிற்கு பாராட்டினார்.