மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | என்னை சுயநலத்துக்காக பயன்படுத்துபவர்கள் இன்னும் நல்லா பயன்படுத்திகோங்க : விஜய் சேதுபதி | ஒரு மாதமாக காதல்... 4 மாதத்தில் திருமணம் : விஷால் சொல்கிறார் | பிளாஷ்பேக்: ஆட்டோ சங்கரை உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கமான காட்சிகள் நீக்கம் | நடிகையின் நகைகளை திருடியவர் கைது: ரூ.23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு | சந்தானம் பட வழக்கு முடித்து வைப்பு |
மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் 2015ல் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'தனி ஒருவன்'. அப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஜெயம் ரவி, நயன்தாரா நாயகன், நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவித்தார்கள். முதல் பாகத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரம் இறந்துவிட்டதால் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை. அந்தக் கதாபாத்திரத்தை விடவும் பவர்புல்லான ஒரு வில்லன் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் 'தனி ஒருவன் 2' படத்தை வாழ்த்தி அரவிந்த்சாமியும், கார்த்தியும் டுவீட் செய்துள்ளனர். “சூப்பர்ப் புரோமோ, குழுவினருக்கு வாழ்த்துகள்,” என அரவிந்த்சாமியும், “நீண்ட நாட்களாக காத்திருந்த அறிவிப்பு மச்சி... உனக்கும் உனது பிக் பிரதருக்கும் வாழ்த்துகள்,” என கார்த்தியும் வாழ்த்தியுள்ளனர். இருவருக்கும் இயக்குனர் மோகன்ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.