Advertisement

சிறப்புச்செய்திகள்

ரஜினியின் ‛வேட்டையன்' பற்றி கலை இயக்குனர் கதிர் வெளியிட்ட தகவல் | மீண்டும் சூர்யா படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | சென்னை சாலைக்கு எஸ்பிபி பெயர் : முதல்வர் அறிவிப்பு | நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் : விஷாலின் காழ்ப்புணர்ச்சி என நடிகர் உதயா குற்றச்சாட்டு | 10 வயது குறைவு... 8 ஆண்டுகளுக்கு பின் மனகசப்பு : விவாகரத்து கேட்டு கமல் பட நடிகை ஊர்மிளா மனு | ஏ.ஐ.,-யால் அடுத்த 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது - யுவன் சங்கர் ராஜா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா | வேட்டையன் : ரஜினிக்கு குரல் கொடுக்கும் மனோ | வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனின் 'ஏஐ' குரல் | மெய்யழகன் படத்திற்கு யு சான்றிதழ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வாசல் திறந்து வைத்த எம்ஜிஆர்

25 செப், 2024 - 10:01 IST
எழுத்தின் அளவு:
Flashback:-MGR-opened-doors-for-SP-Balasubrahmanyam


ஆந்திராவை சேர்ந்த எஸ்.பி.பி.,க்கு பெரிய என்ஜீனியர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. இதற்காகத்தான் சென்னை வந்தார். பாடுவது என்பது அவரது பொழுதுபோக்காக இருந்தது. ஒரு பாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை பார்த்து, அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டிருந்த ஜானகி அவர் சினிமாவில் பாட வேண்டும் என்று சொன்னார். அதன்பிறகுதான் அவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. சில தெலுங்கு, கன்னட படங்களில் பாடிவிட்டு 1969-ல் தான் எஸ்.பி.பி.யால் தமிழுக்கு வரமுடிந்தது.

முதலில் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் வாய்ப்பு கேட்டபோது 'உன் தமிழ் உச்சரிப்பு சரியில்லை. நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு வா' என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். அதன்பிறகு சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளை எழுத்துகூட்டி படித்து தமிழ் கற்றுவிட்டு எம்.எஸ்.வி.,யிடமே திரும்ப சென்றார்.

அப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்புதான் 'அடிமைப்பெண்'. 'ஆயிரம் நிலவே வா...' பாடலை பாடும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார். ஆனால் பாடல் பதிவாகும் நாளன்று எஸ்.பி.பிக்கு உடல்நலமில்லை. குரல் சரியில்லை. எம்.ஜி.ஆர்.,க்கு காலதாமதம் செய்வது பிடிக்காது என்பதால் வேறொருவரை கொண்டு அந்த பாடலை பதிவு செய்ய எம்.எஸ்.வி முடிவு செய்தார்.

இதனை கேள்விப்பட்ட எம்.ஜிஆர் 'வேண்டாம் அந்த பையனே பாடட்டும்'. என்று கூறிவிட்டார். பாடல் பதிவு முடிந்ததும் எஸ்.பி.பி எம்ஜிஆரை சந்தித்து நன்றி கூறச் சென்றார். அப்போது எம்ஜிஆர் ''தம்பி நீங்க எம்ஜிஆர் படத்துல பாடப்போறேன்னு எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க. நீங்க பாடலைன்னா உங்க குரல் நல்லாஇல்லைன்னு நானே ரிஜிக்ட் பண்ணிட்டதா பேசுவாங்க. அது உங்க எதிர்காலத்துக்கு தடையா இருக்கும்ங்றதாலதான் உங்களையே பாடச் சொன்னேன்”. என்றார்.

அந்த 'ஆயிரம் நிலவே' பாடல்தான் எஸ்.பி.பி.,யின் இசை வாழ்க்கைக்கு வாசல் கதவை திறந்து வைத்தது. பின்னாளில் எம்.ஜிஆர், தான் நடித்த எல்லா படங்களிலும் எஸ்.பி.பியை பாட வைத்தார். இன்று எஸ்.பி.பாலசுப்ரமணித்தின் 4வது நினைவு நாள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'தக் லைப்' முடித்துவிட்டு 'ஏஐ' படிக்கச் சென்ற கமல்ஹாசன்'தக் லைப்' முடித்துவிட்டு 'ஏஐ' ... பிளாஷ்பேக்: உடுமலை நாராயண கவி: தீப்பெட்டி விற்றவர் 10 ஆயிரம் பாடல்களை எழுதினார் பிளாஷ்பேக்: உடுமலை நாராயண கவி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in