லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் மிக முக்கியமானவர் உடுமலை நாராணகவி. தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர். நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும், முன்னணி அரசியல் கட்சி தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
இளம் வயதிலேயே தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி தனது அண்ணன் வீட்டில் வளர்ந்தார். தீப்பெட்டி சுமந்து விற்று ஒரு நாளைக்கு 25 காசு சம்பாதித்தார். வறுமையின் காரணமாக பள்ளிபடிப்பை 4வது வகுப்போடு முடிடித்துக் கொண்ட அவர் கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்டு அதனை கற்றார். உடுமலை சரபமுத்து சாமி கவிராயரிடம் நாடக நடிப்பும், பாடல் எழுதவும் கற்றார். பின்னர் சங்கரதாஸ் சாமியிடம் நாடக கலையை கற்று தேர்ந்தார். ஆரம்பத்தில் விடுதலை வேட்கையை தூண்டும் பாடல்களை எழுதியவர், பின்னர் திராவிட கருத்துகள், பகுத்தறிவு கருத்துள்ள பாடல்களை எழுதினார்.
'சந்திரமோகனா' என்ற படத்தில் முதல் பாடலை எழுதி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். திரைப்பாடல்கள், தனி பாடல்கள் எல்லாம் சேர்த்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார் நாராயண கவி. இன்று அவரின் 115வது பிறந்த நாள்