ரஜினியின் ‛வேட்டையன்' பற்றி கலை இயக்குனர் கதிர் வெளியிட்ட தகவல் | மீண்டும் சூர்யா படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | சென்னை சாலைக்கு எஸ்பிபி பெயர் : முதல்வர் அறிவிப்பு | நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் : விஷாலின் காழ்ப்புணர்ச்சி என நடிகர் உதயா குற்றச்சாட்டு | 10 வயது குறைவு... 8 ஆண்டுகளுக்கு பின் மனகசப்பு : விவாகரத்து கேட்டு கமல் பட நடிகை ஊர்மிளா மனு | ஏ.ஐ.,-யால் அடுத்த 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது - யுவன் சங்கர் ராஜா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா | வேட்டையன் : ரஜினிக்கு குரல் கொடுக்கும் மனோ | வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனின் 'ஏஐ' குரல் | மெய்யழகன் படத்திற்கு யு சான்றிதழ் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருப்பதும், அவருக்கும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருக்கும் இடையிலான நெருக்கம் குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அடையாறு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் அவர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில் “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் கடற்கரை சாலையில் உள்ள தனது மனைவி வீட்டில் இருந்து தனக்கு சொந்தமான உடமைகளை மீட்டுத்தர வேண்டும் “என்று கூறப்பட்டுள்ளது.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.