ரஜினியின் ‛வேட்டையன்' பற்றி கலை இயக்குனர் கதிர் வெளியிட்ட தகவல் | மீண்டும் சூர்யா படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | சென்னை சாலைக்கு எஸ்பிபி பெயர் : முதல்வர் அறிவிப்பு | நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் : விஷாலின் காழ்ப்புணர்ச்சி என நடிகர் உதயா குற்றச்சாட்டு | 10 வயது குறைவு... 8 ஆண்டுகளுக்கு பின் மனகசப்பு : விவாகரத்து கேட்டு கமல் பட நடிகை ஊர்மிளா மனு | ஏ.ஐ.,-யால் அடுத்த 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது - யுவன் சங்கர் ராஜா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா | வேட்டையன் : ரஜினிக்கு குரல் கொடுக்கும் மனோ | வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனின் 'ஏஐ' குரல் | மெய்யழகன் படத்திற்கு யு சான்றிதழ் |
தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். உலகத் திரையுலகத்தில் புதிதாக அறிமுகமாகும் விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதைத் தனது படங்களில் பயன்படுத்த ஆரம்பிப்பார்.
தற்போது சினிமா தொழில்நுட்பம் 'ஏஐ' கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அதனால் அது பற்றி தெரிந்து கொள்ள மூன்று மாதப் பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்து படிக்க கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் படிப்பை முடித்துவிட்டு வந்த பிறகுதான் அவரது அடுத்த படம் பற்றி அவர் முடிவெடுப்பார் என்கிறார்கள். அவரது அடுத்த வெளியீடாக 'தக் லைப்' படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு 'இந்தியன் 3' வெளியாகலாம். அதற்காக சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெறலாம் என்கிறார்கள்.
அதை முடித்த பிறகு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க உள்ள 'கமல்ஹாசன் 237' படம் ஆரம்பமாகுமா என்பது அப்போதுதான் தெரியும். கமல் படங்களைப் பொறுத்தவரையில் என்ன வேண்டுமானாலும் மாற்றங்கள் நடக்கலாம்.