ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தமிழ் சினிமாவில் தற்போது கட்அவுட் கலாச்சாரம் குறைந்துவிட்டன. ஆனால் அரசியலில் இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை முதல் பெரிய கட்அவுட் என்று 'பைரவி' படத்திற்காக தயாரிப்பாளர் எஸ்.தாணு வைத்த 100 அடி உயர ரஜினி கட்அவுட்டை சொல்வார்கள். ஆனால் அதற்கு முன்பே முதன் முறையாக மிக உயரமான கட்அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான்.
சிவாஜி நடித்த சரித்திர படங்களில் முக்கியமானதாக கருதப்படும் 'வணங்காமுடி' படத்திற்காக சென்னையின் மைய பகுதியில் இருந்த சித்ரா தியேட்டரில் 80 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டது. இதனை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனம் அமைத்தது. இந்த கட்அவுட்தான் அதுவரையில் ஆசியாவில் அமைக்கப்பட்ட கட்அவுட்களில் பெரியது. அதனை அன்றைக்கு இருந்த மீடியாக்கள் பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டது.
'வணங்காமுடி' படத்தை பி.புல்லையா இயக்கினார். சிவாஜியுடன் நாகய்யா, எம்.கே.ராதா, சாவித்ரி, நம்பியார், ராஜசுலோச்சனா, எம்.சரோஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1957ம் ஆண்டு வெளியானது.




