தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். இயக்குனர் விஜய்யுடனான திருமணம், அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண முறிவு என பரபரப்பான நிகழ்வுகளுக்கு பிறகு சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார் அமலா பால். பின்னர் தனது காதலரான ஜெகத் தேசாய் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அமலாபால். மகனுக்கு இலை என்று பெயர் சூட்டியுள்ளதை அப்போதே அறிவித்த அமலாபால், இப்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கணவருடன் மிக நெருக்கமாக முத்தமிட்டபடி தனது மகனையும் கையில் வைத்தபடி அமலாபால் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.