இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் | பிளாஷ்பேக்: பிரவீனாவின் நிறைவேறாத கனவு | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை ஜோடியாக நடித்த படம் | இசை கலைஞர்கள் சினிமாவை மட்டும் நம்பகூடாது : ஏ.ஆர்.ரெஹானா சொல்கிறார் | கூலி படத்தின் சண்டைக்காட்சி லீக் : லோகேஷ் கனகராஜின் வருத்தமான பதிவு | பெப்சி வரம்பு மீறுகிறது: நடிகர் சங்கம் எச்சரிக்கை |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். இயக்குனர் விஜய்யுடனான திருமணம், அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண முறிவு என பரபரப்பான நிகழ்வுகளுக்கு பிறகு சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார் அமலா பால். பின்னர் தனது காதலரான ஜெகத் தேசாய் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அமலாபால். மகனுக்கு இலை என்று பெயர் சூட்டியுள்ளதை அப்போதே அறிவித்த அமலாபால், இப்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கணவருடன் மிக நெருக்கமாக முத்தமிட்டபடி தனது மகனையும் கையில் வைத்தபடி அமலாபால் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.