'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
தமிழ்த் திரையுலகத்தின் சீனியர் நடிகை ராதிகா, இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரான விராட் கோலியை விமானப்பயணத்தில் சந்தித்துள்ளார். அது பற்றி, “லட்சக்கணக்கான மக்களால் விரும்பப்படும் சாதனையாளர் விராட்கோலியுடன் லண்டனிலிருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் இங்கு விளையாட வருகிறார், மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். செல்பிக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார். ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி புகைப்படத்தையும் ராதிகா பகிர்ந்துள்ளார்.
இந்தியாவுக்கு வந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது வங்கதேச அணி. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19ம் தேதி ஆரம்பமாகி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்காக லண்டனில் ஓய்வில் இருந்த விராட் கோலி அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது ராதிகாவுடனான சந்திப்பு நடந்துள்ளது.