மதராஸி - மீண்டும் பழைய படப் பெயருடன் சிவகார்த்திகேயன் | பில்கேட்ஸிற்கு டீ கொடுத்த சாய்வாலா உடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்ட அர்பாஸ் கான் | சீரியல்களுக்கு பாட்டு எழுதுவது தான் கஷ்டம் - பா.விஜய் | 101 வயதில் மறைந்த தெலுங்கு நடிகை கிருஷ்ணவேணி | பிப்ரவரி 21ல் 5 படங்கள் ரிலீஸ் | தண்டேல் : நாக சைதன்யாவின் முதல் 100 கோடி | மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் படம் 'வணங்கான்'. இத்தலைப்பை தான் பதிவு செய்து வைத்துள்ளேன் என்று கூறி ஆரஞ்ச் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர், தலைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுரேஷ் காமாட்சி, பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 2022ம் ஆண்டு முதல் இத்தலைப்பில் படம் உருவாகி வருகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணம் பறிக்கும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதி, தலைப்புக்கு பதிப்புரிமை சட்டம் பொருந்தாது என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து சரவணன் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் தென்னிந்திய சினிமா மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் கில்டுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.
தயாரிப்பாளரும், இயக்குனரும் வழக்கைத் தவிர்க்க தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பின்னர் அவர்கள் பின்வாங்கியதால் வழக்கு தொடர்ந்ததாகவும் தனது மேல்முறையீட்டு மனுவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.