சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் படம் 'வணங்கான்'. இத்தலைப்பை தான் பதிவு செய்து வைத்துள்ளேன் என்று கூறி ஆரஞ்ச் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர், தலைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுரேஷ் காமாட்சி, பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 2022ம் ஆண்டு முதல் இத்தலைப்பில் படம் உருவாகி வருகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணம் பறிக்கும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதி, தலைப்புக்கு பதிப்புரிமை சட்டம் பொருந்தாது என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து சரவணன் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் தென்னிந்திய சினிமா மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் கில்டுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.
தயாரிப்பாளரும், இயக்குனரும் வழக்கைத் தவிர்க்க தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பின்னர் அவர்கள் பின்வாங்கியதால் வழக்கு தொடர்ந்ததாகவும் தனது மேல்முறையீட்டு மனுவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.




