ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

கடந்த சில நாட்களாகவே மலையாள நடிகரும் தற்போது மத்திய இணை அமைச்சராக பொறுப்பு வகிப்பவருமான சுரேஷ் கோபி நடித்திருக்கும் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) திரைப்படம் சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டு வந்ததும், நேற்று (ஜூன்-27) திட்டமிட்டபடி வெளியாக முடியாமல் போனதும் தான் மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம். படத்தின் டைட்டில் இடம் பெற்றுள்ள ஜானகி என்கிற பெயரை மாற்றி விட்டு வேறு பெயர் வைக்கும் படி சென்சார் அதிகாரிகள் படத்தின் இயக்குனரிடம் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர்,
ஆனால் படத்தின் பெயரை மாற்ற மறுத்து படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு இந்த படத்தை அனுப்பி வைத்தனர். இந்த படம் திட்டமிட்டபடி நேற்று ரிலீஸ் ஆகவில்லை. அதேசமயம் ரிவைசிங் கமிட்டியும் அதே பெயர் காரணத்தை காட்டி சான்றிதழ் தர மறுத்துள்ளது. இந்த நிலையில் பட தயாரிப்பாளர் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று (ஜூன் 27) இந்த வழக்கு விசாரணை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஜானகி என டைட்டில் பெயர் வைப்பதால் என்ன பிரச்சனை வரப்போகிறது ? ஜானகி என்றால் சீதாவை குறிக்கும் என்று சொன்னால் ஏற்கனவே சீதா, கீதா என்கிற பெயர்களிலெல்லாம் படங்கள் வந்து விட்டதே. அப்போது என்ன பிரச்சனை வந்தது ? ஏன் ராம் லக்ஷ்மண் என்கிற பெயரில் கூட படம் வந்ததே. இப்போது ஜானகி என்கிற டைட்டில் வைக்கப்பட்டதற்கு கூட யார் ஒருவரிடம் இருந்து கூட எந்த புகாரும் இல்லையே..? அப்படி இருக்கையில் இதில் எங்கே மதம் குறித்த பிரச்சனை உள்ளே வந்தது?” என சராமரியாக கேள்விகளை எழுப்பினார்.
சென்சார் தரப்பில் இருந்து ஆஜரான பெண் வழக்கறிஞர், இந்த கேள்விகளை சமாளிக்கும் விதமாக சில வாதங்களை முன் வைத்தார். ஆனாலும் திருப்தியடையாத நீதிபதி மீண்டும் இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என கூறியுள்ளார்.