ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளிவந்து இன்றளவும் பேசப்படுகிற 'ரத்தக்கண்ணீர்' படத்திற்கு பல பெருமைகள் உண்டு. அதில் அதிகம் அறியப்படாத விஷயம் என்னவென்றால், ரத்தக்கண்ணீர்தான் முதல் பிளாஷ்பேக் படம்.
பிற்காலத்தில் கதையின் கடந்த கால பகுதியை சொல்வதற்கு பிளாஷ்பேக் உபயோகப்படுத்தப்பட்டது. நாடகத்தில் செய்ய முடியாத, சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்ட ஒன்று இந்த பிளாஷ்பேக்.
ரத்தக்கண்ணீருக்கு முன்பு பல படங்களில் பிளாஷ்பேக் யுக்தி பயன்படுத்தப்பட்டிருந்தாலும், முழு படமும் பிளாஷ்பேக்காக வெளிவந்ததில் ரத்தக்கண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
தொழுநோய் பாதித்த உடலுடன் கம்பு ஊன்றிய நிலையில் பரதேசி போல் நிற்கும் எம்.ஆர்.ராதாவின் சிலை அருகில் கூட்டம் கூடிநிற்கும். அந்தக் கூட்டத்தில் இருந்துகொண்டு, எஸ்.எஸ்.ராஜேந்திரன், தன் நண்பனைப் பற்றி, தன் நண்பன் சீரழிந்தது பற்றி கதை போல் பிரசங்கம் செய்வதில் இருந்து ப்ளாஷ்பேக்காக படம் தொடங்கும்.
சினிமாவே வேண்டாம் என்று விலகிச் சென்ற எம்.ஆர்.ராதாவை, 12 வருடங்கள் கழித்து, தன் நேஷனல் பிக்சர்ஸ் 'ரத்தக்கண்ணீர்' மூலம் மீண்டும் சினிமாவுக்குக் கொண்டுவந்தார் பெருமாள் முதலியார். 1954ம் ஆண்டு தீபாவளிக்கு வந்தது 'ரத்தக்கண்ணீர்'.'பராசக்தி'யை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் -பஞ்சு தான் இந்தப் படத்தையும் இயக்கினார்கள்.




