விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தற்போது கண்ணப்பா என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இது 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் கதை.
இந்த படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் பெண் கடவுளாகவும், பிரீத்தி முகுந்தன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று விஷ்ணு மஞ்சுவின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். படம் தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்திலுள்ள விஷ்ணுவின் இரண்டு அலுவலகங்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே விஷ்ணுவிடம் இன்று விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய விஷ்ணு '' என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. படம் வெளியாகும் நிலையில் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டாம்'' என்றார்.