புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மலையாள திரையுலகில் அட்ஜெஸ்மெண்ட், மீடூ பஞ்சாயத்துகள் தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ள நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவும் பல உண்மைகளை போட்டு உடைத்து வருகிறார். அப்படியாக அவர் கூறிய ஒரு செய்தியில் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான ரூபா ஸ்ரீக்கும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை நடந்ததாகவும் அதிலிருந்து நான் தான் அவரை காப்பாற்றி அனுப்பி வைத்தேன் எனவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ரூபா ஸ்ரீ, 'அன்று ஷகிலா தான் என்னை காப்பாற்றி அனுப்பி வைத்தார். ஆனால், அவர் சொன்னது அத்தனையும் உண்மையல்ல. நான் மலையாளத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்தேன். அப்போது வேறு ஒரு படத்திலும் நடித்து வந்தேன். படக்குழுவினரிடமும் இதை ஏற்கனவே சொல்லி அந்த படத்தின் ஷூட்டிங் போகவும், அதற்கு டாக்ஸி புக் செய்யவும் கேட்டிருந்தேன். முதலில் ஓகே என்று சொல்லியவர்கள், கடைசியில் என்னை அனுப்பாமல் பிரச்னை செய்தனர். அவர்கள் குடித்தும் இருந்தனர். அப்போது ஷகிலா தான் என்னை காப்பாற்றி அங்கிருந்து டாக்ஸி புக் செய்து அனுப்பி வைத்தார். அதன்பிறகு அந்த படத்தின் ஷூட்டிங் முடித்து இரண்டு நாட்கள் கழித்து நான் மீண்டும் அதே படத்திற்கு ஷூட்டிங் வந்துவிட்டேன். மற்றபடி அது அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை இல்லை' என்று கூறியுள்ளார்.