22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுவர் நடிகர் சிவக்குமார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பு, ஓவியம், இலக்கியம், பேச்சாளர் என பன்முக திறமையால் திகழ்கிறவர். ஹீரோ, குணச்சித்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் அதில் ஜாம்பவானக தனது திறமையை நிரூபித்தவர் நடிகர் சிவகுமார். ஆனால், ஒரு காலக்கட்டத்தில் அவர் நடிப்பதையே விட்டுவிட்டார்.
அது ஏன்? என்ற கேள்விக்கு அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு டிவி சீரியல்களில் அதிகம் நடித்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் சம்பாதித்ததை விட சீரியலில் அதிகம் சம்பாதித்தேன். 'பாசமலர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி கணேசன் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக 2 நாட்கள் தூங்காமல் சாப்பிடமால் இருந்து நடித்தார். அதுபோல நானும் நான் நடித்த சீரியலின் ஒரு காட்சிக்காக கஷ்டப்பட்டு நடித்தேன். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு நடிகை காதலனுடன் போனில் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். நான் கோபத்துடன் உயிரைக் கொடுத்து நடிக்கிறேன் இப்படி மதிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்டேன். அதற்கு அந்த பெண் 'இப்ப எதுக்கு சார் கத்துறீங்க? எப்படியும் இத டப்பிங் தான பேச போறீங்க' என அலட்சியமாக பேசினார். அன்று நான் இந்த நடிப்புக்கு மரியாதை இல்லை. இனி இந்த நடிப்பே வேண்டாம் என என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டு முடிவெடுத்தேன்' என்று கூறியுள்ளார்.