2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

90களில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை ஷகீலா. அதன்பிறகு சமீப காலமாக அது போன்ற படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷகீலா, படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதுடன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வது மூலமாக தனது புதிய முகத்தை காட்டி வருகிறார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாத ஷகீலா, தனது சகோதரர் மகள் ஷீத்தல் என்பவரை சிறுவயதிலிருந்தே தனது வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஷகீலாவுக்கும் ஷீத்தலுக்கும் இடையே சிறு பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு ஷீத்தல், ஷகீலாவின் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். இதனை தொடர்ந்து தனது வழக்கறிஞர் சவுந்தர்யா மூலமாக இந்த பிரச்னையை பேசி தீர்ப்பதற்காக ஷகீலா முயன்றார். அப்போது நேற்று ஷகிலாவின் வீட்டிற்கு வந்த சவுந்தர்யா, மீண்டும் திரும்பி வந்த ஷீத்தல் மற்றும் அவரது நிஜமான தாயார் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதில் ஒரு கட்டத்தில் ஷீத்தல் அருகில் இருந்த ட்ரே ஒன்றை எடுத்து ஷகீலாவை தாக்கியுள்ளார். அவரது தாயார், வழக்கறிஞர் சவுந்தர்யாவின் கையை கடித்துள்ளார். இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஷகீலாவும் ஷீத்தலும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்துள்ளனர். ஷகீலா வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் இந்த புகார் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோடம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.