காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடுஜீவிதம் மற்றும் குருவாயூர் அம்பலநடையில் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் ஆடுஜீவிதம் திரைப்படம் சீரியஸான கதை அம்சத்துடன் வெளியாகி இருந்தது. இதற்கு முற்றிலும் மாறாக குருவாயூர் அம்பலநடையில் படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார் பிரித்விராஜ். தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கி வரும் பிரித்விராஜ் கிட்டத்தட்ட இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு நோபடி (Nobody) என்று டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் மிஸ்டரி திரில்லர் படமாக வெளியான ரோஷாக் படத்தை இயக்கிய இயக்குனர் நிசாம் பஷீர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் பிரித்விராஜும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.