அண்ணன், தம்பியுடன் மீண்டும் கூட்டணியில் ஜிவி பிரகாஷ் | பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் | அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தி கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் இந்த படம் வெளியாகும் முதல் நாளில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை நான்கு மணி காட்சி திரையிடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகாலை 4 மணி கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. என்றாலும், கோட் படத்தின் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த அனுமதி கிடைத்தால் கோட் படத்தின் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படும் என்கிறார்கள். அப்படி இல்லையென்றால் வழக்கம் போல் காலை 9 மணிக்கு தான் இப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்று தெரிகிறது.